Saturday, September 1, 2007

ஆறும் அது ஆழமில்லை...

படம்: முதல் வசந்தம்.
உயிர்: இளையராஜா.
குரல்: இளையராஜா.




ஆறும் அது ஆழமில்லை அது சேரும் கடலும் ஆழமில்லை
ஆழம் எது ஐயா அந்த பொம்பளை மனசு தான்யா
அடி அம்மாடி அதன் ஆழம் பாத்ததாரு?
அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ

(ஆறும் அது ஆழமில்லை...)

மாடி வீட்டு கன்னி பொண்ணு மனசுக்குள்ள ரெண்டு கண்ணு
ஏழைக்கண்ணை ஏங்கவிட்டு இன்னும் ஒன்னை தேடுதம்மா
கண்ணுக்குள்ள மின்னும் மைய்யி உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு சொந்தமெல்லாம் எங்கே போச்சு?
நேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளி வேஷம் திரை போட்டு செஞ்ச மோசமே!

(ஆறும் அது ஆழமில்லை...)

தண்ணியில கோலம் போடு, ஆடிக்காத்தில் தீபம் ஏத்து,
ஆகாயத்தில் கோட்ட கட்டு, அந்தரத்தில் தோட்டம் போடு,
ஆண்டவனை கூட்டு வந்து அவனை அங்கே காவல் போடு,
அத்தனையும் ந‌டக்கும் அய்யா ஆச வெச்சா கெடக்கும் அய்யா
ஆனா கெடக்காது நீ ஆசை வெக்கும் மாது அவ நெஞ்சம் யாவும் வஞ்சமே!

(ஆறும் அது ஆழமில்லை...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: