Tuesday, September 11, 2007

ஞாயிறு என்பது கண்ணாக...

படம்: காக்கும் கரங்கள்.
உயிர்: K.V.மகாதேவன்.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: டி.எம்.செளந்தர்ராஜன், பி. சுசீலா.



ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக

நேற்றைய பொழுது கண்ணோடு
இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு

ஊருக்கு துணையாய் நான் இருக்க
எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற
மைவிழி கிண்ணத்தில் நெய் வார்த்தேன்

(ஞாயிறு என்பது கண்ணாக...)

முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்
உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன்
பின்னொரு பிறவி எடுத்து வந்தேன்
பேசிய படியே கொடுக்க வந்தேன்

(ஞாயிறு என்பது கண்ணாக...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: