Thursday, December 13, 2007

உதயமே உயிரே...

நண்பர் தஞ்சாவூர்காரன் அவர்களுக்காக...

படம்: ஒரு பொண்ணு நெனச்சா.
உயிர்: எஸ். ஏ. ராஜ் குமார்.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், உமா ரமணன்.




மீண்டும் பெங்களூருக்கு மாற்றப்பட்டு விட்டேன் அதனால் இனி தினமும் பாடல்கள் தான் நம் வலைப்பூவில் :) .

இந்த வார இறுதி பயணம் அதனால் பாடல் வரிகள் புதன் கிழமை அன்று வெளியிடப்படும்.


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Sunday, December 9, 2007

யார் யார் சிவம்...

படம்: அன்பே சிவம்.
உயிர்: வித்யாசாகர்.
உடல்: வைரமுத்து.
குரல்: கமல்ஹாசன்.


யார் யார் சிவம் நீ நான் சிவம்
வாழ்வே தவம் அன்பே சிவம்
ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)
யார் யார் சிவம் நீ நான் சிவம்

யார் யார் சிவம் நீ நான் சிவம்
வாழ்வே தவம் அன்பே சிவம்
இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)

யார் யார் சிவம் நீ நான் சிவம்
அன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லையடா
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.