Monday, November 12, 2007

என்ன சத்தம் இந்த நேரம்...

படம்: புன்னகை மன்னன்.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.



என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா
அடடா..

(என்ன சத்தம் இந்த நேரம்...)

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே

கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே

மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு

ஆரிரரோ இவர் யார் எவரோ
பதில் சொல்வார் யாரோ

(என்ன சத்தம் இந்த நேரம்...)

கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ

உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ


மங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்

யாரிவர்கள் இரு பூங்குயில்கள்
இளங்காதல் மான்கள்

(என்ன சத்தம் இந்த நேரம்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Thursday, November 8, 2007

சீர் கொண்டு வா வெண் மேகமே...

படம்: நான் பாடும் பாடல்.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.




சீர் கொண்டு வா வெண் மேகமே
இது இனிய வசந்த காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்

(சீர் கொண்டு வா வெண் மேகமே...)

ஸ்ரீராகம் ஒன்று நீ பாடு கண்ணே
செவ்வாயில் தேனை நீ ஊட்டும் முன்னே

ஆலாபனை .............
ஆலாபனை ஆராதனை
கையும் கையும் சேரும்
காதல் கல்யாணம் ஓஓஓஓ
காமன் போகும் தேரில்
காதல் ஊர்கோலம்


(சீர் கொண்டு வா வெண் மேகமே...)

தீண்டாத போது என் தேகம் வாட
நீ தீண்டும் போது இன்பங்கள் கூட

என்னென்பதோ ஓஓஓஓஓஓ
என்னென்பதோ ஏனென்பதோ
பாடும் நேரம் பார்த்து ஆசை கூடாதோ
அங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ


(சீர் கொண்டு வா வெண் மேகமே...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Wednesday, November 7, 2007

Stranded on the streets...


இன்று பிறந்த நாள் காணும் "பத்மஸ்ரீ" கமல்ஹாசன் அவர்களுக்கு இன்றைய பாடல்கள்.


படம்: நளதமயந்தி.
உயிர்: ரமேஷ் விநாயகம்.
குரல்: கமல்ஹாசன்.




ஏதேதோ பேசி மாட்டிக்கொண்ட
என் கண்ணே மூக்கே காதே
வேண்டாத வம்பே

Some one help me

Stranded on the streets
Got to know where to go
Don't know what to do
I don't know what to know
Broken in the dark
I'm searching for the light
I don't know what is wrong and
I don't know what is right
Nowhere to belong
Missing my home town

Some of them here
Baby thing I'm going down
Think about the blues
I'm feeling down to low
I need someone to know
Why I'm feeling so

Why can't I be?
The way I meant to be...
Why can't they see?
Everything the way I see


What could be so wrong?
In the way I've been so long
Tell me my friend

Tell me where do i belong
Its the long and lonely night
I want someone to held me tight
Give me a brand new start
Before i fall apart
Chase away my blues
And mend this broken heart


(Stranded on the streets.....)

Mr. Moon wants to tell me now
La la lai lai la la lai
How you feeling alone above
La la lai lai la la lai
If you looking for some company
La la lai lai la la lai
Just look down and smile on me
La la lai lai la la lai

Why can't I be?
The way I meant to be...
Why can't they see?
Everything the way I see

What could be so wrong?
In the way I've been so long
Tell me my friend
Tell me where do i belong
Its the long and lonely night
I want someone to held me tight
Give me a brand new start
Before i fall apart
Chase away my blues
And mend this broken heart

(Stranded on the streets...)

Mr. Moon tell me what you care
La la lai lai la la lai
Hear my story that i got to share
La la lai lai la la lai
Tell me why life is so unfair
La la lai lai la la lai
You know better cause you're sitting out there
La la lai lai la la lai

Why can't I be?
The way I meant to be...
Why can't they see?
Everything the way I see

What could be so wrong?
In the way I've been so long
Tell me my friend
Tell me where do i belong
It's the long and lonely night
I want someone to held me tight
Give me a brand new start
Before i fall apart
Chase away my blues
And mend this broken heart

(Stranded on the streets...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

உன்னை விட...

படம்: விருமாண்டி.
உயிர்: இளையராஜா.
உடல்: கமல்ஹாசன் .
குரல்: கமல்ஹாசன், ஷ்ரேயா கோசல்.



உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை
உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை யாருமில்லை
வாக்கப்பட கிடைசான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி

என்னை விட உன்னை சரிவர புரின்சிக்க யாருமில்லை யெவளுமில்லை
உன்னை விட..... என்னை விட........

அல்லி கொடிய காது அசைக்குது
அசையும் கொளது உடம்பு கூசுது
புல்லரிசு பாவம் என்னை போலவே அலை பாயுது
நிலவில் காயும் வஎட்டி சேலையும்
நம்மை பார்து சோடி சேருது
சேர்து வைச்ச காதே துதி பாடுது சுதி சேருது
என்ன புது தாகம் அனல் ஆகுதேய் என் தயக்கம்
யாரு சொல்லி தந்து வந்தது
கான கனா வந்து கொல்லுது
இதுக்கு பாரு தான் மோட்சமா
மோட்சமா மோட்சமா....
உன்னை விட.................................
காட்டு வழி காளைங்க கழுத்து மணி
கேட்கயில நமக்கு அது கோயில் மணி
ராதிரியில் புல் வெளி நனைக்கும் பனி
போதிகிற நமக்கு அது மூடு துணி
- உன்னை விட......

உன் கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா
நூறு ஜென்மம் வேணும் கேட்குறேன் சாமியே

(என்ன கேட்குற சாமிய? - 100 ஜென்மம் உன் கூட - போதுமா?)
நூறு ஜென்மம் நமக்கு போதுமா
வேற வரம் யாதும் கேட்போமா?
சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய

காத்தா அலைஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும்
ஆகாசமா ஆன போதிலும்
என்ன உரு எடுத்த போதிலும் சேர்ந்து தான் பொறக்கனும்
இருக்கணும் கலக்கணும்

(உன்னை விட...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Tuesday, November 6, 2007

கேளடி என் பாவையே...

படம்: கோபுர வாசலிலே.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.




கேளடி என் பாவையே ஆடவன் உன் தேவையே
மோகம் கொண்ட போதும் தாகம் வந்த போதும்
ஆண்மைதானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்

(கேளடி என் பாவையே...)

தன்னைத்தானே சுற்றி வாழும் பூமி போலே
என்னை நானும் சுற்றி வந்த வாழ்விலே
நித்தம் பூமி சுற்றி ஓடும் சூரியன் போல்
பாவையுன்னை நானும் சுற்றி வந்ததேன்


ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமிதானம்மா
உன்னை என்னைச் சேர்த்து வைக்கக் கோபம் ஏனம்மா
என் சொந்தமே என் சொர்க்கமே இணைந்திடம்மா
கனிந்திடு கலந்திடு இன்பம் பொங்கும் என்றுமே

(கேளடி என் பாவையே...)

கானம் பாடும் வீணை நாடும் வாடலாமா
மீட்டும் வேளை ராகமின்றிப் போகுமா
வானம் பார்த்த பூமி போல ஆகலாமா
தென்றல் தேடும் பூவைப் போன்ற பூவையே


சேவல் இன்றி பெட்டை ஒன்று வீணில் வாடுதே
காவல் இன்றி கன்னி இங்கு கானம் பாடுதே
நினைத்தது நடந்தது தொடர்ந்ததம்மா
சிலிர்த்தது சிலிர்ந்தது இன்னும் என்ன வெட்கமா

(கேளடி என் பாவையே...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

பாடும் வானம்பாடி...

படம்: நான் பாடும் பாடல்.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.



பாடும் வானம்பாடி ஹ..
பாடும் வானம்பாடி ஹ..
மார்கழி மாதமோ
பார்வைகள் ஈரமோ
ஏனோ ஏனோ

(பாடும் வானம்பாடி...)

பாவை வண்ணம் கோவில் ஆகும்
பார்வை காதல் பூச்சூடும்
மாலை வண்ணம் கைகள் ஆகும்
சோலைத் தென்றல் தாலாட்டும்

நெஞ்சில் ஆசை வெள்ளம் - ஆஆஆஆ
நெஞ்சில் ஆசை வெள்ளம்
பொங்கும் நேரம் இன்பம்
காற்றோடு நான் பாடவா..

(பாடும் வானம்பாடி...)

மேகம் மஞ்சம் போடும் போது
மின்னல் தீபம் ஏந்தாதோ
வானம் மாலை சூடும் போது
தாகம் கொஞ்சம் தீராதோ

தேவி போதும் போதும்- ஆஆஆஆஆ
தேவி போதும் போதும்
நீயே காதல் வேதம்

மோகங்கள் நீராடுது

(பாடும் வானம்பாடி...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Monday, November 5, 2007

கண்மணியே காதல் என்பது...

படம்: ஆறிலிருந்து அறுபது வரை.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம, ஜானகி.




கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

(கண்மணியே காதல் என்பது...)

மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா
நேரமும் வந்ததம்மா
பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே
இந்தப் பாவையின் உள்ளத்திலே
பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்

(கண்மணியே காதல் என்பது...)

பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது காரணம் நீயறிவாய்
தேவையை நானறிவேன்

நாளொரு தேகமும் மோகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம்
இளம் வயதினில் வந்த சுகம்

தோள்களை நீயணைக்க வண்ணத் தாமரை நான் சிரிக்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்

(கண்மணியே காதல் என்பது...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

ஒரு ஜீவன் தான்...

படம்: நான் அடிமை இல்லை.
உயிர்: விஜய் ஆனந்த்.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.



ஒரு ஜீவன் தான்
உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும்
உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது

பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது

காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

(ஒரு ஜீவன் தான்...)

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன்
வேறாரும் நெருங்காமல் மனவாசல்தனை மூடுவேன்

உருவானது நல்ல சிவரஞ்சனி
உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி
ராகங்களின் ஆலாபனை
மோகங்களின் ஆராதனை
உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்

(ஒரு ஜீவன் தான்...)

காவேரி கரை சேர அணை தாண்டி வரவில்லையோ
ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையோ
வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்
வளையோசைதான் நல்ல மணிமந்திரம்
நான்தானய்யா நீலாம்பரி தாலாட்டவா நடுராத்திரி
சுதியும் லயமும் சுகமாய் இணையும் தருணம்

(ஒரு ஜீவன் தான்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Thursday, November 1, 2007

வளையோசை கலகலகலவென...

படம்: சத்யா.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், லதா மஞ்கேஷ்கர்.



வளையோசை கலகலகலவெனக் கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலுசிலுசிலு எனச் சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்

(வளையோசை கலகலகலவென...)

ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னைக் காணும் சபலம் வரக் கூடும்


நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்


கண்ணே என் கண் பட்ட காயம்
கை வைக்கத் தானாக ஆறும்


முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்

(வளையோசை கலகலகலவென...)

லாலலாலலாலா லாலா
லாலலாலலாலா லாலா ஹே
லாலலாலலாலா லாலலாலலாலா

உன்னைக் காணாதுருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்

நீங்காத ரீங்காரம் நான்தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே


ராகங்கள் தாளங்கள் நூறு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு


சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேச்சில்தான்


(வளையோசை கலகலகலவென...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

பூங்காற்று உன் பேர் சொல்ல...

படம்: வெற்றி விழா.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா.



பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று
நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று
தீர்த்தக் கரை ஓரத்திலே தேன் சிட்டுகள் உள்ளத்திலே
கல்யாண வைபோகம் தான்
நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று

மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு
மோகப் பண் பாடுதே
மேலைக் காற்றோடு கைசேர்த்து நாணல்
காதல் கொண்டாடுதே

ஆலம் விழுதோடு கிளிக்கூட்டம் ஆடும்
காலம் இதுவல்லவா
ஈரச் சிறகோடு இசைபாடித் திரியும்
நேரம் இதுவல்லவா

ஏதேதோ எண்ணம் தோன்ற
ஏகாந்தம் இங்கே
நான் காணும் வண்ணம் யாவும்
நீதானே அன்பே


வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும்
ஆசைகள் ஈடேறக் கூடும்

(பூங்காற்று உன் பேர் சொல்ல...)

ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன
ஜீவன் உன்னோடுதான்

தேவி ஸ்ரீதேவி பூவாரம் சூட
தேவன் என்னோடுதான்

நீல வான் கூட நிறம் மாறிப் போகும்
நேசம் நிறம் மாறுமா
கால காலங்கள் போனாலும் என்ன
காதல் தடம் மாறுமா


ஓயாமல் உன்னைக் கொஞ்சும்
ஊதாப்பூ வண்ணம்
ராஜாவின் முத்தம் கொள்ளும்
ரோஜாப்பூ கன்னம்


வாடை தீண்டாத வாழைத் தோட்டம்
ஆனந்த எல்லைகள் காட்டும்


(பூங்காற்று உன் பேர் சொல்ல...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.