Tuesday, September 25, 2007

துள்ளி எழுந்தது காற்று...

படம் : கீதாஞ்சலி.
உயிர் : இளையராஜா
குரல் : இளையராஜா, உமா ரமணன்.



துள்ளி எழுந்தது காற்று சின்ன குயிலிசை கேட்டு
சந்த வரிகளை போட்டு சொல்லி கொடுத்த்து காற்று
உறவோடு தான் அதை பாடணும்
இரவோடு தான் அரங்கேறணும்

(துள்ளி எழுந்தது காற்று...)

உயிரே ஒரு வானம்பாடி உனக்காக கூவுது
அழகே புது ஆசை வெள்ளம் அணை தாண்டி தாவுது
மலரே தினம் மாலை நேரம் மனம் தானே நோகுது
மாலை முதல் காலை வரை சொன்னாலென்ன காதல் கதை
காமன் கணை எனை வதைக்குதே

(துள்ளி எழுந்தது காற்று...)

அடியே ஒரு தூக்கம் போட்டு வெகு நாள் தான் ஆனது
கிளியே பசும் பாலும் தேனும் வெறுப்பாகி போனது
நிலவே பகல் நேரம் போலே நெருப்பாக காயுது
நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாற்றியே
வா வா கண்ணே இதோ அழைக்குறேன்

(துள்ளி எழுந்தது காற்று...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: