Tuesday, September 4, 2007

அழகான புள்ளி மானே...

படம்: மேகம் கருத்திருக்கு்.
உயிர்: மனோஜ் கியான் .
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.





அழகான புள்ளி மானே உனக்காக அழுதேனே
பொண்ணுக்கு தாலி எதுக்கு
மூணு முடிச்சி வெகுமானம் அருமுடிச்சி அவமானம்

(அழகான புள்ளி மானே...)

அந்தப்புறத்த காவல் காக்க நானும் வந்தேங்க‌
என் அண்ணா பெயர காவல் காக்க யாரும் இல்லீங்க‌
வழக்குக்கு நானும் போக மாட்டேன் மானே
வக்கீலுக்கு ஃபீசு என்ன மானம் தானே?

(அழகான புள்ளி மானே...)

வழைமரத்தில் ஊஞ்சல் கட்ட வசதியிருக்காது
நீ தோலைப்பாத்து மாடு புடிச்சா தொழிலுக்காகாது
புழுவுக்கு ஆசப்பட்டு போகும் மீனே
தூண்டியில மாட்டிக்கிட்டா சோகம் தானே

(அழகான புள்ளி மானே...)

மனசு மட்டும் வெள்ளை தானே மயக்கம் தீராதா?
நான் கண்ணீராலே கழுவிப்பாத்தா கருப்பும் மாறாதா?
நெஞ்சுக்குள்ள முள்ளு தச்சு வாடும் போது
நாக்குக்குள்ள புண்ணு வந்தா வார்த்தை ஏது?

(அழகான புள்ளி மானே...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: