Thursday, September 13, 2007

உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல...

படம்: இதயகமலம்.
உயிர்: K.V.மகாதேவன்.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: பி.சுசீலா.



உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத எண்ணும் எண்ணல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாம்ல் நானும் நானல்ல

(உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல...)

இங்கு நீ ஒரு பாதி நா ஒரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

(உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல...)

ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலும் இல்லை
ஒரு கோவில் இல்லாமல் தீபமும் இல்லை
நீ எந்தன் கோவில் நான் எங்கு தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல

(உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: