Friday, September 7, 2007

கண்ணுக்குள் நூறு நிலவா...

படம்: வேதம் புதிது.
உயிர்: தேவேந்திரன்.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா.



கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தாண் வார்தை வருமா?
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான்வார்தை வருமா?

(கண்ணுக்குள் நூறு நிலவா...)

தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்ற்ம் சொல்லுமா
கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமா?
வானுக்கு எல்லை யார் போட்டது?
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது
சாஸ்திரம் தாண்டி தப்பி செல்வதேது?

(கண்ணுக்குள் நூறு நிலவா...)

ஆணின் தவிப்பு அடங்கிவிடும்
பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும்
உள்ளம் என்பது உள்ள வரைக்கும்
இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்
என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண்ணுள்ளம் இன்று ரெண்டானது
ரெண்டா? ஏது? ஒன்று பட்ட போது

(கண்ணுக்குள் நூறு நிலவா...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: