Friday, September 7, 2007

அதிகாலை நேரமே...

சகோதரி சசிகலா அவர்களுக்காக.....

படம்: மீண்டும் ஒரு காதல் கதை.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி



அதிகாலை நேரமே, புதிதான ராகமே
எங்கெங்கிலும் ஆலாபனை
கூடாத நெஞசம் இரண்டும் கூடுதே பாடுதே

(அதிகாலை நேரமே...)

காற்றோடு மோதும் ஆனந்த ராகம் தாலாட்டுது
காவேரி மின் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது
காவேரி மின் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது
புது சங்கமம் சுகமெங்கிலும்
ஒன்றை ஒன்று எந்நாளும் சேர்வதே ஆனந்தம்

(அதிகாலை நேரமே...)

உன்னோடு நானும், என்னோடு நீயும் உறவாடலாம்
நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற
நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற
தோளோடுதான் தோள் சேரவே
தூங்காமல் காணும் இன்பம் வாவெனும் நேரமே..

(அதிகாலை நேரமே...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

2 comments:

Unknown said...

மி்க்க நன்றி sir. இந்த பாடலை வெகு நாட்களாக தேடிக்கொண்டு இருந்தேன். மற்றொரு பாடலை ஒலி பரப்ப முடியுமா?
படம் : சட்டம் ஒரு இருட்டறை
பாடல்: "தனிமையிலே................ ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்..."

ஸ்ரீ said...

இப்பொழுது பாடல் சரியாக ஒலிக்கும் என நினைக்கிறேன். நீங்கள் கேட்ட பாடல் இப்போது என்னிடம் இல்லை அது கண்டிப்பாக அடுத்த வாரம் வெளியிடப்படும்.

நன்றி