Thursday, September 13, 2007

சொன்னது நீ தானா...

படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்.
உயிர்: விஸ்வநாதன், ராமமூர்த்தி.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: பி.சுசீலா.



சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே
சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என் உயிரே
ஏன் ஏன் ஏன் என் உயிரே
சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே

என்னொரு கைகளிலே யார் யார் யார் நானா
எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே
சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே

மங்கள மாலை குங்குமம யாவும் தந்ததெல்லாம் நீ தானே
மணமகளை திருமகளாய் நினைத்ததெல்லாம் நீ தானே
என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீ தானே
இறுதி வரை துணை இருப்பேன் என்றதும் நீ தானே
இன்று சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா
ஒரு கொடியில் ஒரு முறை தான் மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறை தான் வளரும் உறவல்லவா
சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: