Friday, September 7, 2007

இளைய நிலா பொழிகிறதே...

படம்: பயணங்கள் முடிவதில்லை.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.



இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

(இளைய நிலா பொழிகிறதே...)

வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும்
வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும்
வான வீதியில் மேக ஊர்வலம் காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

(இளைய நிலா பொழிகிறதே...)

முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ
நீல வானிலே வெள்ளி ஓடைகள் போடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

(இளைய நிலா பொழிகிறதே...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

2 comments:

Unknown said...

மி்க அருமையான பாடல். spb-ன் குரல் பழைய நினைவுகளுக்கு நம்மை கொனண்டு செல்லும். இது போன்ற பாடல்களை தொடர்ந்து வழங்கவும்.

ஸ்ரீ said...

நிச்சயம் இது போன்ற பாடல்கள் தொடரும் சகோதரி :)