Friday, September 14, 2007

தனிமையிலே ஒரு ராகம்...

சகோதரி சசிகலா அவர்களுக்காக...

படம்: சட்டம் ஒரு இருட்டறை.
உயிர்: சங்கர் கணேஷ்.
குரல்: சுரேந்தர், ஜானகி.



தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளைமையின் நினைவுகள் பறந்தது

ஹோ நெஞ்சமே உன்னிடம் இன்று தான் மாற்றமே
கல்லான நெஞ்சங்கள் கூட இளம் பெண்ணாளே பூவாக மாறும்
இனி நான் காணும் இன்பங்கள் ஆறு போல ஓடவேண்டும்

(தனிமையிலே ஒரு ராகம்...)

என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே
என் உள்ள பொன்வாசல் தேடி
இசை காற்றாக என்னோடு கூடி
புது ஊற்றாக இன்பங்கள் ஊர வேண்டும் சேரவேண்டும்

(தனிமையிலே ஒரு ராகம்...)

ஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே
எண்ணாத இன்பங்கள் யாவும் இனி என்னாலும் உன்னோடு வாழும்
பனி நீராட்டும் இந்நேரம் பாடவேண்டும் கூட வேண்டும்

(தனிமையிலே ஒரு ராகம்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

(தாமதத்திற்கு வருந்துகின்றேன்.... :( )

4 comments:

Unknown said...

மி்க்க நன்றி Sri. இந்த பாடலை அதிக முறை கேட்டு ரசித்தேன்.

எனது அடுத்த request

"உறவெனும் புதிய வானில்" என்ற "நெஞ்சத்தை கிள்ளாதே" படப் பாடல்.

Thanjavurkaran said...

Nanbare,

Sattam Oru Iruttarai Music Director is Shankar Ganesh - Not IR.

ஸ்ரீ said...

வாங்க தஞ்சாவூர்காரரே!!!

தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி. மாற்றிவிடுகிறேன். என்ன செய்ய இளையராஜா என்னை கெடுத்துவிட்டார். எந்த அழகான பாடலாக இருந்தாலும் அவர் தான் என் மனதில் முதலில் உதிக்கிறார் :)

ஸ்ரீ said...

சசிகலா. என்னை சந்தோஷப்படுத்தும் பாடல்களை வெளியிட்டு கொண்டிருக்கிறேன் நன்றி தேவை இல்லை. ஆனாலும் சொல்லிவிட்டீர் அதனால் வாங்கிக்கொள்கிறேன். ஏதோ என்னால் முடிந்த ஒரு சின்ன முயற்சி தான் இந்த வலைப்பூ. வந்ததற்கு நன்றி. அடுத்த விருப்பம் விரைவில் வெளியிடப்படும்