Monday, September 10, 2007

மாலைப்பொழுதின் மயக்கத்திலே...

படம்: பாக்யலஷ்மி.
உயிர்: விஸ்வநாதன், ராமமூர்த்தி.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: பி. சுசீலா.



மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி
காரணம் ஏன் தோழி
மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பதும் ஏன் தோழி காண்பதும் ஏன் தோழி

(மாலைப்பொழுதின் மயக்கத்திலே...)

மணம் முடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவுகண்டேன் தோழி
மங்கை என் கையில் குங்குமம் தந்தார் மலையிட்டார் தோழி
வழிமறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்துவிட்டார் தோழி
பறந்துவிட்டார் தோழி

(மாலைப்பொழுதின் மயக்கத்திலே...)

கனவில் வந்தவர் யாரெனக்கேட்டேன் கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி
இளமை எல்லாம் வெறும் கனவு மையம் இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அறியாது முடிவும் தெறியாது மயங்குது எதிர்காலம்
மயங்குது எதிர்காலம்


(மாலைப்பொழுதின் மயக்கத்திலே...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: