Monday, September 3, 2007

ஓ பாபா லாலி...

படம்: இதயத்தை திருடாதே.
உயிர்: இளையராஜா.
குரல்: மனோ.



ஓ பாபா லாலி கண்மணி லாலி பொன்மணி லாலி
பாடினேன் கேளடி

(ஓ பாபா லாலி...)

நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட
காதலன் குழந்தைதான் காதலி
ஏன் செவ்விழி கலங்குது பூந்தென்றலில்
கொதித்ததா குளிர்ந்ததா கூறடி
தலை சாய்த்திட மடி பாய்மேல் திருமேனிக்கு சுகமோ
எந்த நாளிலும் வாடாத இளம் தாமரை முகமோ
இதை காப்பது என்றும் பார்ப்பது இந்த தாய் மனமே

(ஓ பாபா லாலி...)

ஓ மேகமே ஓரமாய் நீ ஒதுங்கிடு
இரைச்சலோ இடிகளோ வேண்டுமோ
ஓ குயிலே பாடிவா என் பாடலை
நல்லிசை இதயத்தின் நாதமோ
எழும் சந்தமும் இனிதாக அதன் ஓசைகள் சுகமோ
இந்த நாளொரு அலை பாய வரும் ஆசைகள் கனவோ
எந்த ஆசையும் நிறைவேறிட நல்ல நாள் வருமே

(ஓ பாபா லாலி...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: