Tuesday, September 18, 2007

பாட வந்ததோ...

படம்: இளமைக் காலங்கள்.
உயிர்: இளையராஜா.
உடல்: வாலி.
குரல்: கே ஜே யேசுதாஸ், சுசீலா.



பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை தள்ளாடும் பெண் மாலை
இளமை வயலில் அமுத மழை விழ

(பாட வந்ததோ...)

ராஜமாலை தோள்சேரும் நாணமென்னும் தேனூரும்
கண்ணில் குளிர்காலம் நெஞ்சில் வெயில்காலம்
அன்பே எந்நாளும் நான் உந்தன் தோழி
பண்பாடி கண்மூடி உனது மடியில் உறங்கும் ஒரு கிளி

(பாட வந்ததோ...)

மூடிவைத்த பூந்தோப்பு காலம் யாவும் நீ காப்பு
இதயம் உறங்காது இமைகள் இறங்காது
தேனே...கங்கைக்கு ஏனிந்த தாகம்
உல்லாசம் உள்ளூரும் நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்

பூவே...பூவைக்கு ஏனிந்த வாசம்

(பாட வந்ததோ...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: