Friday, September 7, 2007

காதல் கடிதம் வரைந்தேன்...

படம்: சேரன் பாண்டியன்.
உயிர்: எஸ்.ஏ. ராஜ்குமார்.
குரல்: மனோ, ஸ்வர்னலதா.



காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா?
உள்ளம் துள்ளுகின்றதே நெஞ்சை அள்ளுகின்றதே
உங்கள் கடிதம் வந்ததால் இன்பம் எங்கும் பொங்குதே
உண்மை ஒன்று தான் இன்ப‌ காதலில் என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்
காதல் கடிதம் வரைந்தாய் எனக்கு
வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே?

உயிரின் உருவம் தெரியாதிருந்தேன்
உனையே உயிராய் அறிந்தே தொடர்ந்தேன்
வானும் நிலவும் போலவே
மலரும் மணமும் போலவே
கடலும் அலையை போலவே என்றும் வாழவேண்டுமே
உண்மை ஒன்று தான் இன்ப‌ காதலில் என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்

(காதல் கடிதம் வரைந்தேன்...)

பயிலும் பொழுது எழுதும் எழுத்து
உனது பெயர் தான் அதிகம் எனக்கு
வானம் கையில் எட்டினால்
அங்கும் உன்னை எழுதுவேன்
நிலைவை கொண்டு வந்துதான் பெயரில் வர்ணம் தீட்டுவேன்
உண்மை ஒன்று தான் இன்ப‌ காதலில் என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்

(காதல் கடிதம் வரைந்தேன்...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: