Thursday, September 13, 2007

ஆட்டுவித்தால் யாரொருவர்...

படம்: அவன் தான் மனிதன்.
உயிர்: விஸ்வநாதன்.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: டி.எம்.செளந்தர்ராஜன்.



ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே
ஆனால் நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே

(ஆட்டுவித்தால் யாரொருவர்...)

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்ப்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன்

(ஆட்டுவித்தால் யாரொருவர்...)

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா
இதை உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விளகும் கண்ணா
உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விளகும் கண்ணா

(ஆட்டுவித்தால் யாரொருவர்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: