Tuesday, September 11, 2007

நான் பேச நினைப்பதெல்லாம்...

படம்: பாலும் பழமும்.
உயிர்: விஸ்வநாதன், ராமமூர்த்தி.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: டி.எம்.செளந்தர்ராஜன், பி. சுசீலா.



நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண் வேண்டும் நீ காண் வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நான் ஆக வேண்டும் நான் ஆக வேண்டும்

பாலோடும் பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பாரத்து பசியார வேண்டும் பசியார வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நான் ஆக வேண்டும்
மடிமீதுவிளையாடும் சேயாக வேண்டும் நீ ஆக வேண்டும்

சொல்லென்றும் மொழி என்றும் பொருள் என்றும் இல்லை
பொருள் என்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்தபின்னே உயிர் சேர்ந்தபின்னே
உலகங்கள் நமை அன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை

(நான் பேச நினைப்பதெல்லாம்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

2 comments:

தறுதலை said...

வாணிஜெயராம் - ஜேசுதாஸ் இணைந்து பாடிய பாடல்களில் தரமானவற்றை தொகுத்து போடுங்களேன்.

-----------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

ஸ்ரீ said...

காண்டிப்பாக நண்பரே!! இன்னும் யேசுதாஸின் பாடல்கள் அவ்வளவாக வெளியிடாததில் எனக்கும் ஒரு வருத்தம் உண்டு. இந்த கண்ணதாசன் தொகுப்பு முடிந்த பின் அதை வெளியிட்டு விடுகிறேன். கருத்துக்கு நன்றி ;)