Wednesday, October 10, 2007

யார் தூரிகை தந்த ஓவியம்...

நண்பர் தஞ்சாவூர்காரன் அவர்களுக்காக...

படம்: பாரு பாரு பட்டணம் பாரு.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்,உமா ரமணன்.

>



யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலம் இடும் மேகங்களே

(யார் தூரிகை தந்த ஓவியம்...)

கடல் அலைகளின் தாளம் பல ஜதிகளும் தோன்றும்
நினைவினில் ஒரு ராகம் நிதம் பல வித பாவம்
ஆடும் கடல் காற்றும் அங்கு வரும் பாட்டும்
ஓராயிரம் பாவம் ஏற்றுதே நிதமும் தேடுதே ராகம் பாடுதே
மனதினிலே கனவுகளே வருகிறதே தினம் தினம்

(யார் தூரிகை தந்த ஓவியம்...)

சிறு மலர்களின் வாசம் பல கவிதைகள் பேசும்
சில மனங்களின் பாவம் பல நினைவினில் வாழும்
அலை என ஓடும் ஆசை வந்து கூடும்
உன் வானமோ பூவைச்சூடுதே
பல நூறாசைகள் உள்ளிலே ஓடுதே
இள மனதில் புது உறவு தெரிகிறதே தினம் தினம்

(யார் தூரிகை தந்த ஓவியம்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: