Monday, October 29, 2007

கல்யாண மாலை கொண்டாடும்...

படம்: புது புது அர்த்தங்கள்.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.



கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்

(கல்யாண மாலை கொண்டாடும்...)

ஸ்ருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

(கல்யாண மாலை கொண்டாடும்...)

வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது

மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது


அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே


நல்ல மனையாளின் நேசமொரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி

சந்தோஷ சாம்ராஜ்யமே

(கல்யாண மாலை கொண்டாடும்...)

கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னைச் சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா


நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கு நெஞ்சோடு இருக்கு
சிரிக்காத நாளில்லையே


துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
மக்கள் மனம் போல பாடுவேன் கண்ணே

என் சோகம் என்னோடு தான்...

(கல்யாண மாலை கொண்டாடும்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: