Friday, October 26, 2007

பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம்...

படம்: அடுத்த வாரிசு.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.



பேசக் கூடாது
பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை வேகம் இல்லை
லீலைகள் காண்போமே

ஆசை கூடாது மணமாலை தந்து
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே
ஆசை கூடாது

பார்க்கும் பார்வை நீ
என் வாழ்வும் நீ
என் கவிதை நீ
பாடும் ராகம் நீ
என் நாதம் நீ
என் உயிரும் நீ

காலம் யாவும்
நான் உன் சொந்தம்
காக்கும் தெய்வம் நீ
பாலில் ஆடும்
மேனி எங்கும்
கொஞ்சும் செல்வம் நீ

இழையோடு கனியாட
தடை போட்டால் நியாயமா

உன்னாலே பசி தூக்கம் இல்லை
எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை
இனிமேல் ஏனிந்த எல்லை

ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே

(பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம்...)

ரராரரா லலாலலா ரராரரா லாலாலலா

காலைப் பனியும் நீ
கண்மணியும் நீ
என் கனவும் நீ
மாலை மயக்கம் நீ
பொன் மலரும் நீ
என் நினைவும் நீ

ஊஞ்சலாடும் பருவம் உண்டு
உரிமை தரவேண்டும்
நூலில் ஆடும் இடையும் உண்டு
நாளும் வரவேண்டும்

பலகாலம் உனக்காக
மனம் ஏங்கி வாடுதே
வருகின்ற தை மாதம் சொந்தம்
அணிகின்ற மணிமாலை பந்தம்
இரவோடும் பகலோடும் இன்பம்

ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே

(பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: