Tuesday, October 30, 2007

யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ...

படம்: இதய கோயில்.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.



யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ
மேகம் தன்னை மேகம் மோதி மின்னல் மின்னுதோ ஹோ
மின்னல் இந்த நேரம் எந்தன் கண்ணில் மின்னுதோ

ஒரு ராகம் புது ராகம்
அதில் சோகம் தான் ஏனோ?


(யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ...)

ராகங்கள் நூறு அவள் கொடுத்தாள்
கீதங்கள் நூறு அவள் தொடுத்தாள்

ஜீவன் அங்கே என்னைத் தேடும்
பாடல் இங்கே காற்றில் ஓடும்


காணாமல் கண்கள் நோகின்றதோ
காதல் ஜோடி ஒன்று வாடும் நேரம் இன்று

ஓர் ஏழை வெண்புறா மேடையில்
என் காதல் பெண்புறா வீதியில்
பூங்காற்று போராடவே
பூத்த பூவும் ஆற்றில் ஓடவே


(யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ...)

வான் மேகம் மோதும் மழைதனிலே
நான் பாடும் பாடல் நனைகிறதே

பாடல் இங்கே நனைவதனாலே
நனையும் வார்த்தை கரையுது இங்கே


ஜென்மங்கள் யாவும் நீ வாழவே
காதல் கொண்ட உள்ளம் காணும் அன்பின் இல்லம்

ஓர் காற்றின் கைகளும் தீண்டுமோ
என் காவல் எல்லையைத் தாண்டுமோ

நியாயங்கள் வாய் மூடுமோ
தெய்வமில்லை என்று போகுமோ



(யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: