Friday, October 12, 2007

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்...

படம்: நினைவெல்லாம் நித்யா.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம். ஜானகி.



ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் கண்கள்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள் ஆஹா

(ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்...)

இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
மெளனமே சம்மதம் என்று
தீண்டுதே மன்மத வண்டு
மெளனமே சம்மதம் என்று
தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு

(ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்...)

வசந்தங்கள் வாழ்த்தும்பொழுது உனது கிளையில் பூவானேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேரானேன்
வசந்தங்கள் வாழ்த்தும்பொழுது உனது கிளையில் பூவானேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேரானேன்
பூவிலே மெத்தைகள் தைத்தேன்
கண்ணுக்குள் மங்கையை வைத்தேன்
பூவிலே மெத்தைகள் தைத்தேன்
கண்ணுக்குள் மங்கையை வைத்தேன்
நீ கட்டும் சேலைக்கு நூலானேன் ஆ..ஹா

(ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: