Monday, October 29, 2007

கேளடி கண்மணி...

படம்: புது புது அர்த்தங்கள்.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.



கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
ஆ...அ அ அ ஆ
நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற


(கேளடி கண்மணி...)

எந்நாளும் தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான்
இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மா
எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்

கானல் நீரால் தீராத தாகம்
கங்கை நீரால் தீர்ந்ததடி
கால் போன பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது


(கேளடி கண்மணி...)

நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாழும் நேரம் உன் மார்போடுதான்
நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா


ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால் தானே உண்டானது
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை


(கேளடி கண்மணி...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: