Monday, October 8, 2007

மண்ணில் இந்தக் காதலன்றி...

படம்: கேளடி கண்மணி.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.




மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ
பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதடா?
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

(மண்ணில் இந்தக் காதலன்றி...)

வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி
தந்தனமும் சங்கத் தமிழும் பொங்கிடும் வசந்தம்
சிந்திவரும் குங்குமமுதம் தங்கிடும் குமுதம்
கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்
கன்னித் துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம் தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்

(மண்ணில் இந்தக் காதலன்றி...)


முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவளமும்
கொட்டு மலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும்வில்லெனும் புருவம்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகள்
எண்ணிவிட மறந்தாள் எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா?

(மண்ணில் இந்தக் காதலன்றி...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: