Thursday, August 23, 2007

நான் பாடும்...

படம்: இதயக்கோவில்.
உயிர்: இளையராஜா.
உடல்: வைரமுத்து.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.




நான் பாடும் மௌளன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்

(நான் பாடும்...)

உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னைக் காண வெண்ணிலா வந்து போவ‌துண்டு
ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது
கூடுதானே இன்று பாடுது
கூடு இன்று குயிலைத் தானே தேடுது

(நான் பாடும்...)

கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே யோகம் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது காம்பு இங்கு வாடுது
காலம் என்னைக் கேள்வி கேட்குது
கேள்வி இன்று கேலியாகிப் போனது

(நான் பாடும்...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

2 comments:

நிலாரசிகன் said...

இப்பாடலை எழுதியது வைரமுத்தா இல்லை மு.மேத்தாவா?

ஸ்ரீ said...

வைரமுத்து தான் நண்பரே!!!!