Thursday, August 23, 2007

மெளனமான நேரம்...

படம்: சலங்கை ஒலி.
உயிர்: இளையராஜா.
உடல்: வைரமுத்து.
குரல்: எஸ்.பி.பி, எஸ்.ஜானகி.



மெளனமான நேரம்
இளமனதில் என்ன பாரம்?
மனதில் ஓசைகள்
இதழில் மெளனங்கள்
ஏனென்று கேளுங்கள்.

(மெளனமான நேரம்...)

இளமைச் சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ?
புலம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ?
குளிக்கும் ஒர் கிளி
கொதிக்கும் நீர்த்துளி
ஊதலான மார்கழி
நீளமான ராத்திரி
நீயும் வந்து ஆதரி.

(மெளனமான நேரம்...)

இவளின் மனது இன்னும் இரவின் கீதமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
ஆதனால் நேசமோ
கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ?

(மெளனமான நேரம்...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: