Wednesday, August 29, 2007

அந்தி மழை...

படம்: ராஜ பார்வை.
உயிர்: இளையராஜா.
உடல்: வைரமுத்து.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.



அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே

(அந்தி மழை...)

தேனில் வண்டு மூழ்கும் போது பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்றாய்
தண்ணீரில் முழ்கிக் கொண்டே தாகம் என்றாய்
தனிமையிலே வெறுமையிலே எத்தனை நாளடி இளமையிலே
எத்தனை இரவுகள் சுட்டன கனவுகள் இமைகளும் சுமையடி இள மயிலே

(அந்தி மழை...)

தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது?
தண்ணீல் நிற்கும்போதே வேர்க்கின்றது
நெஞ்சுபொறு கொஞ்சமிரு தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்கலிள் சந்தனமாய் எனை பூசுகிறேன்

(அந்தி மழை...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: