Tuesday, November 6, 2007

கேளடி என் பாவையே...

படம்: கோபுர வாசலிலே.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.




கேளடி என் பாவையே ஆடவன் உன் தேவையே
மோகம் கொண்ட போதும் தாகம் வந்த போதும்
ஆண்மைதானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்

(கேளடி என் பாவையே...)

தன்னைத்தானே சுற்றி வாழும் பூமி போலே
என்னை நானும் சுற்றி வந்த வாழ்விலே
நித்தம் பூமி சுற்றி ஓடும் சூரியன் போல்
பாவையுன்னை நானும் சுற்றி வந்ததேன்


ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமிதானம்மா
உன்னை என்னைச் சேர்த்து வைக்கக் கோபம் ஏனம்மா
என் சொந்தமே என் சொர்க்கமே இணைந்திடம்மா
கனிந்திடு கலந்திடு இன்பம் பொங்கும் என்றுமே

(கேளடி என் பாவையே...)

கானம் பாடும் வீணை நாடும் வாடலாமா
மீட்டும் வேளை ராகமின்றிப் போகுமா
வானம் பார்த்த பூமி போல ஆகலாமா
தென்றல் தேடும் பூவைப் போன்ற பூவையே


சேவல் இன்றி பெட்டை ஒன்று வீணில் வாடுதே
காவல் இன்றி கன்னி இங்கு கானம் பாடுதே
நினைத்தது நடந்தது தொடர்ந்ததம்மா
சிலிர்த்தது சிலிர்ந்தது இன்னும் என்ன வெட்கமா

(கேளடி என் பாவையே...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: