Monday, November 5, 2007

கண்மணியே காதல் என்பது...

படம்: ஆறிலிருந்து அறுபது வரை.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம, ஜானகி.




கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

(கண்மணியே காதல் என்பது...)

மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா
நேரமும் வந்ததம்மா
பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே
இந்தப் பாவையின் உள்ளத்திலே
பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்

(கண்மணியே காதல் என்பது...)

பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது காரணம் நீயறிவாய்
தேவையை நானறிவேன்

நாளொரு தேகமும் மோகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம்
இளம் வயதினில் வந்த சுகம்

தோள்களை நீயணைக்க வண்ணத் தாமரை நான் சிரிக்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்

(கண்மணியே காதல் என்பது...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

1 comment:

sume said...

அருமையான வரிகள் பாராட்டுக்கள்