Monday, November 5, 2007

ஒரு ஜீவன் தான்...

படம்: நான் அடிமை இல்லை.
உயிர்: விஜய் ஆனந்த்.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.



ஒரு ஜீவன் தான்
உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும்
உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது

பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது

காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

(ஒரு ஜீவன் தான்...)

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன்
வேறாரும் நெருங்காமல் மனவாசல்தனை மூடுவேன்

உருவானது நல்ல சிவரஞ்சனி
உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி
ராகங்களின் ஆலாபனை
மோகங்களின் ஆராதனை
உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்

(ஒரு ஜீவன் தான்...)

காவேரி கரை சேர அணை தாண்டி வரவில்லையோ
ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையோ
வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்
வளையோசைதான் நல்ல மணிமந்திரம்
நான்தானய்யா நீலாம்பரி தாலாட்டவா நடுராத்திரி
சுதியும் லயமும் சுகமாய் இணையும் தருணம்

(ஒரு ஜீவன் தான்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: