Showing posts with label K.V.மகாதேவன். Show all posts
Showing posts with label K.V.மகாதேவன். Show all posts

Friday, September 14, 2007

இதய வீணை தூங்கும் போது...

படம்: இருவர் உள்ளம்.
உயிர்: K.V.மகாதேவன்.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: பி.சுசீலா.



இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா
விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா
வீட்டு குயிலை கூண்டில் வைத்தால் பாட்டு பாடுமா பாட்டு பாடுமா

(இதய வீணை தூங்கும் போது...)

மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே
சில மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே அடிமை செய்தானே

உருகிவிட்ட மெழுகினிலே ஒளி ஏது
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது
பழுது பட்ட கோவிலிலே தெய்வம் ஏது
பனி படர்ந்த பாதையிலே பயணம் ஏது
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Thursday, September 13, 2007

உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல...

படம்: இதயகமலம்.
உயிர்: K.V.மகாதேவன்.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: பி.சுசீலா.



உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத எண்ணும் எண்ணல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாம்ல் நானும் நானல்ல

(உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல...)

இங்கு நீ ஒரு பாதி நா ஒரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

(உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல...)

ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலும் இல்லை
ஒரு கோவில் இல்லாமல் தீபமும் இல்லை
நீ எந்தன் கோவில் நான் எங்கு தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல

(உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Wednesday, September 12, 2007

தூங்காத கண்ணென்று ஒன்று...

படம்: குங்குமம்.
உயிர்: K.V.மகாதேவன்.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: டி.எம்.செளந்தர்ராஜன், பி. சுசீலா.



தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னை கண்டு

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதை ஒன்று நீ பேச
உற்றாரும் காணாமல் உயிர் ஒன்று சேர்ந்தாட
உண்டாகும் சுவை என்று ஒன்று

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

யாரென்ன சொன்னாலும் செல்லாது
அணை போட்டு தடுத்தாலும் நில்லாது
தீராத விளையாட்டு திரை போட்டு விளையாடி
நாம் காணும் சுகமென்று ஒன்று

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

வெகுதூரம் நீ சென்று நின்றாலும்
உன் விழி மட்டும் தனியாக வந்தாலும்
வருகின்ற விழி ஒன்று தருகின்ற பரிசென்று
பெறுகின்ற சுகமென்று ஒன்று

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Tuesday, September 11, 2007

ஞாயிறு என்பது கண்ணாக...

படம்: காக்கும் கரங்கள்.
உயிர்: K.V.மகாதேவன்.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: டி.எம்.செளந்தர்ராஜன், பி. சுசீலா.



ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக

நேற்றைய பொழுது கண்ணோடு
இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு

ஊருக்கு துணையாய் நான் இருக்க
எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற
மைவிழி கிண்ணத்தில் நெய் வார்த்தேன்

(ஞாயிறு என்பது கண்ணாக...)

முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்
உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன்
பின்னொரு பிறவி எடுத்து வந்தேன்
பேசிய படியே கொடுக்க வந்தேன்

(ஞாயிறு என்பது கண்ணாக...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

இரண்டு மனம் வேண்டும்...

படம்: வசந்த மாளிகை.
உயிர்: K.V.மகாதேவன்.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: டி.எம்.செளந்தர்ராஜன்.



குடிப்பதற்க்கு ஒரு மனம் இருந்தால்
அவளை மறந்துவிடலாம்
அவளை மறப்பதற்க்கு ஒரு மனம் இருந்தால்
குடித்து விடலாம்
ஆனால் இருப்பதோ ஒரு மனது நான் என்ன செய்வேன் என்ன செய்வேன்

இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று

(இரண்டு மனம் வேண்டும்...)

சிறிய காயம் பெரிய துன்பம்
ஆரும் முன்னே அடுத்த காயம்
உடலில் என்றால் மருந்து போது
உள்ளம் பாவம் என்ன செய்யும்?

(இரண்டு மனம் வேண்டும்...)

இரவும் பகலும் இரண்டானால்
இன்பம் துன்பம் இரண்டானால்
உறவும் பிரிவும் இரண்டானால்
உள்ளம் ஒன்று போதாதே

(இரண்டு மனம் வேண்டும்...)

கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளை தண்டிக்க என்ன வழி?

(இரண்டு மனம் வேண்டும்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.